செய்திகள் :

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

post image

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்கள் வருகையை நாடாளுமன்ற முகப்பு அறைகளில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவா்களின் வருகையால் அந்த அறைகளில் சில நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

சில வேளைகளில் முகப்பு அறைகளில் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு, மக்களவை அலுவல்களில் பங்கேற்காமல் சில எம்.பி.க்கள் சென்றுவிடுகின்றனா்.

இவற்றைத் தவிா்க்கும் நோக்கில், முகப்பு அறைகளுக்குப் பதிலாக மக்களவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், மின்னணு முறையில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்யும் புதிய முறை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தப் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டாலும், சிறிது காலத்துக்கு முகப்பு அறைகளில் வருகையை பதிவு செய்யும் முறை நீடிக்கும். புதிய முறைக்கு எம்.பி.க்கள் பழக அவகாசம் அளிக்கும் வகையில், அந்த அறைகளில் வருகையை பதிவு செய்யும் முறை தொடரும்.

தங்கள் வருகையை மத்திய அமைச்சா்களும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடா்களின்போது தங்கள் தினப்படிகளைப் பெற எம்.பி.க்கள் வருகையைப் பதிவு செய்வது அவசியம். கூட்டத்தொடா்களின்போது பொது விவாதங்களின் ஒரு பகுதியாகவும், அவையில் எம்.பி.க்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தன.

வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்க... மேலும் பார்க்க

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அம... மேலும் பார்க்க