செய்திகள் :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

post image

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

ஹைதராபாத் பயணத்தின்போது பாபா சாஹேப் பி.ஆர். அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை. இந்திய அரசியல் சாசனம் ஆகிய தலைப்புகளைக் கொண்ட அஞ்சல் உறைகளையும் படங்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் அட்டைகளையும் அவர் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தீவிர தொற்று பரவல் காரணமாக, நீதிபதி கவாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்லவகையில் ஒத்துழைப்பதாகவும் ஓரிரு நாளில் முழு நலம் பெற்று அவர் பணிக்குத் திரும்புவார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜ... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்ப... மேலும் பார்க்க

சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜார்க்கண்டு மாநிலத்தில் 19 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்ஹவா, பலாமு, சத்ரா, லட... மேலும் பார்க்க

கல்லூரிக்குள் மாணவிக்கு கத்திக்குத்து!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர் மாணவியைக் கத்தியால் குத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.அலிகார் மாவட்டத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ... மேலும் பார்க்க

கணவரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த மனைவி! காட்டிக்கொடுத்த தடயம்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறில், கணவரைக் கொன்று, வீட்டுக்குள்ளேயே 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, புதைத்துவிட்டு, கேரளத்துக்கு அவர் வேலைக்குச் சென்றுவிட்டதாக நாடகமாடிய சம்பவம... மேலும் பார்க்க