செய்திகள் :

``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி

post image

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மோடி - நிதிஷ் குமார்
மோடி - நிதிஷ் குமார்

மேலும், சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சேர்ந்து எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை குறிவைத்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்த நிலையில், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் செய்தியாளர்களிடம், ``மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போது, மக்களவைத் தேர்தல் எப்படி சட்டப்பூர்வமானதாகவும், சரியானதாகவும் இருக்க முடியும்? அந்த வெற்றி செல்லுமா? கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் என்ன செய்துகொண்டிருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்கிறது?

உதித் ராஜ் - காங்கிரஸ்

இந்தக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? இதன் மூலமே தெரியவில்லையா, அவர்களின் நோக்கங்கள் மோசமானவை. அவர்கள் தேர்தல்களில் மோசடி செய்ய விரும்புகிறார்கள். ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் வாக்குகளை வெட்டி போலி வாக்காளர்களின் பட்டியலைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மகாராஷ்டிரா போன்ற ஒரு மாதிரி தயாரிக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மெக்சிகோ தக்காளிக்கு 17% வரி விதித்த ட்ரம்ப்.. நஷ்டம் யாருக்கு?

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்... மேலும் பார்க்க

`போரை நிறுத்துங்கள்; இல்லை..' - புதினை எச்சரிக்கும் ட்ரம்ப்; இதில் இந்தியாவிற்கு பாதிப்பு என்ன?

அதிபர் ஆவதற்கு முன்பும் சரி... பிறகும் சரி... ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர படாதபாடுப்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், புதினை ப... மேலும் பார்க்க

ஒமர் அப்துல்லா விவகாரம்: ``இது எந்த மாநில முதல்வருக்கும் நடக்கலாம்.." - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. அப்போது அவரைத் தடுத்த காவல்துறை அதிகாரிகள், அவரை நினைவிடத்துக்குள் செல்ல வி... மேலும் பார்க்க

Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனையும்..!

சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகன புகைகளுக்கு இடையேயான தூசுகளிலும் இருந்து நம் முகப்பொலிவை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக, க்ளென்சர், டோனர், சீரம், சன் ஸ்க... மேலும் பார்க்க

OPS: ``மதுரையில் மாநாடு; அங்கே ஒரு முக்கிய முடிவு!'' - என்ன சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.OPSஅதில் பேசிய ஓ.பி.எஸ், "அரசியல்ரீதியான கட்சிகளுக்... மேலும் பார்க்க

TVK Vijay: ``மதுரையில் மாநாடு நடத்த நினைக்கிறார்கள்; ஆனால்..'' - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?

மதுரையில் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு மாவட்டம் முழுக்... மேலும் பார்க்க