செய்திகள் :

அவதூறு வழக்கில் ஆஜராக லக்னௌ வந்தடைந்தார் ராகுல்!

post image

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி லக்னௌ வந்தடைந்தார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய வீரர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பானது லக்னௌ நீதிமன்றத்துக்கு வந்துள்ளதாக ராகுலின் வழக்குரைஞர் பிரன்ஷு அகர்வால் கூறினார்.

ராகுல் காந்தி பிற்பகல் 1 மணியளவில் லக்னௌ விமான நிலையத்தை அடைந்ததாகவும், கட்சியின் மாநில பிரிவுத் தலைவர் அஜய் ராய், பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே ஆகியோருடன் சிறப்பு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்ட பிறகு ராகுல் காந்தி பிற்பகலில் தில்லி திரும்ப உள்ளார். அடுத்த சில நாள்களில் தனது தொகுதியான ரேபரேலியைப் பார்வையிட அவர் மீண்டும் உத்தரப் பிரதேசத்திற்கு வர வாய்ப்புள்ளது என்று அஜய் ராய் தனியார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி நீதிமன்றத்துக்கு வருவதால் நீதிமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எல்லைச் சாலைகள் அமைப்பின் ஓய்வுபெற்ற இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்த புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றம் சாட்டப்பட்டவராக அழைப்பாணை அனுப்பியது.

டிசம்பர் 16, 2022 அன்று, பாரத் ஜோடோ யாத்திரையின்போது பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் உரையாற்றிய ராகுல், டிசம்பர் 9 (2022) அன்று அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலைப் பற்றிக் குறிப்பிட்டு, சீன வீரர்கள் நமது வீரர்களை அடித்தது பற்றி ஒரு முறைகூட கேட்க மாட்டார்கள் என்று கூறியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

சீன வீரர்கள் இந்திய வீரர்களை அடித்ததாகக் கூறப்படுவது குறித்து காந்தியின் அறிக்கையால் தனது உணர்வுகள் புண்பட்டதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 11 அன்று, அவதூறு குற்றச்சாட்டில் ராகுலுக்குச் சம்மன் அனுப்பச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Ahead of a hearing in a defamation case, leader of opposition in Lok Sabha Rahul Gandhi reached Lucknow on Tuesday.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி மு... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது. கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலைய... மேலும் பார்க்க

“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

2030க்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!

லக்னௌ: போதைக்கு அடிமையான மருமகனை அவரது மாமனார் 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் பீலிபீட் மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர் முகமது யாமீன், இவர் போதை ப... மேலும் பார்க்க