செய்திகள் :

போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!

post image

லக்னௌ: போதைக்கு அடிமையான மருமகனை அவரது மாமனார் 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பீலிபீட் மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர் முகமது யாமீன், இவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, அவரது மனைவி தமது தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார்.

தமது மகளின் நிலை கண்டு வெகுண்டெழுந்த அவரது தந்தை, தமது மருமகனை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த நபர் வீட்டுக்கு வந்ததும், அங்கே அவரை சரமாரியாக தாக்கியதுடன் இடுப்பில் அணியும் பெல்ட்டால் அவருக்கு சாட்டையடி தண்டனையையும் வழங்கியுள்ளார்.

மேலும், பெண்ணின் குடும்ப ஆண்கள் அந்த நபரை கூட்டாக தாக்க, மாமனார் தமது மருமகனின் கழுத்தை பூட்ஸ் காலால் நெரித்துச் சித்திரவதைப்படுத்தியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் கேமிராவில் படம்பிடித்து விடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், தரையில் கிடந்தபடி சித்திரவதை பொறுக்க முடியாமல் அந்த நபர் மன்றாடி கெஞ்சுவது தெளிவாகப் பதிவாகியுள்ளாது. பெண்ணின் வீட்டார் அதையெல்லம் பொருட்படுத்தாமல் அந்த நபரை தொடர்ந்து தாக்கியதுடன் அதன்பின் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்தும் அடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இது குறித்து, காவல் துறைக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்குச் சென்று இரு வீட்டாரையும் அதிகாரிகள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நபர் தரப்பிலிருந்து இதுவரை புகார் எதுவும் அளிக்கப்படாததால் இச்சம்பவம் தொடர்பாக எந்தவொரு வழக்கும் பதியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விடியோ சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த பலரும், தலிபான் ஸ்டைலில் மாமனார் தமது மருமகனை அடித்துச் சித்திரவதை செய்துள்ளார் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி மு... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது. கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலைய... மேலும் பார்க்க

“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

2030க்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுற... மேலும் பார்க்க