செய்திகள் :

'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

post image

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இதுசம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்திக்கையில் விஜய்யை கடுமையாக தாக்கிப் பேசினார்.

அப்பாவு
அப்பாவு

அப்பாவு பேசியதாவது, 'விஜய்யின் 3 நிமிட பேச்சைக் கேட்டேன். ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் இறந்தவர் பெயர் கூட விஜய்க்கு சரியாக தெரியவில்லை. யார் வசனம் எழுதிக் கொடுத்து அவர் வாசிக்கிறார் என்றே தெரியவில்லை.

ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணை கேட்பேன் என்றுதான் ஸ்டாலின் கூறியிருந்தார். அஜித்குமார் விஷயத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரே அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படியிருக்க விஜய் யார் சொல்லி இப்படி செய்கிறார் என தெரியவில்லை.

Vijay
Vijay

வருமான வரித்துறையிலிருந்து அருண் ராஜ் வந்திருக்கிறார். அவரை அமித் ஷா அனுப்பி வைத்ததாகத்தான் சொல்கிறார்கள். விஜய் வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு வந்தபோது ஆனந்த்தை வைத்துதான் சரிக்கட்டினார்கள் என சொல்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தபோதே அவருக்கு அமித் ஷாவோடு தொடர்புண்டு. Y பிரிவு பாதுகாப்பை விஜய் கேட்காமலேயே கொடுக்கிறார்களே. அவருக்கு தனி விமானமே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். விஜய்யின் அம்மா கிறிஸ்தவர். சிறுபான்மையினர்களின் வாக்கை உடைக்கத்தான் அவரை பாஜக இறக்கியிருக்கிறது என சொல்கிறார்கள்.' என்றார்.

`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்'- ஆர்.பி.உதயகுமார்

"மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆர்.பி. உதயகுமார்இது குறித்து அவர் வெளியிட்... மேலும் பார்க்க

'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மோகன் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.ஆதவ் அர்ஜூனாஅந்தப்... மேலும் பார்க்க

`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை ... மேலும் பார்க்க

Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’ - மல்லை சத்யா வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரை... மேலும் பார்க்க

"கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றவர் மூலம் ஆய்வறிக்கை தயாரிப்பா?" - சு.வெங்கடேசன்

"கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல்..." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.... மேலும் பார்க்க