'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்
தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மோகன் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், 'கடந்த 10 ஆம் தேதி 11 மணியிலிருந்து 11:30 க்குள் ஒரு ஆட்டோவில் சந்தேகத்துக்குரிய வகையில் ஆயுதங்களுடன் 5 பேர் எங்களின் அலுவலக வாசலில் முகாமிட்டிருந்தனர். அதில் இரண்டு பேர் அலுவலகத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்களெல்லாம் யார் என கேள்வி எழுப்பிய போது முறையான பதில் இல்லை.
கொஞ்ச நேரத்தில் அந்த ஆட்டோ அங்கிருந்து சென்றுவிட்டது. அதே ஆட்டோ மீண்டும் ஒரு 3 நபர்களோடு மதியம் 1 மணியிலிருந்து 1:30 க்குள் எங்கள் அலுவலகத்தை சுற்றிக்கொண்டே இருந்தது. மீண்டும் 3 மணியிலிருந்து 3:20 க்குள் 8 நபர்களுடன் அதே ஆட்டோ எங்களின் அலுவலகத்தைச் சுற்றி வந்தது. இதையெல்லாம் அருகிலிருந்து ஒரு பெண்ணும் கவனித்து உறுதிப்படுத்தினார்.

இடையில் 1 மணியிலிருந்து 1:30 க்குள் திமுக கொடி கட்டிய ஒரு இன்னோவா கார் எங்கள் அலுவலகம் இருக்கும் சாலைக்குள் எந்தக் காரணமும் இல்லாமல் வந்து சென்றிருக்கிறது. இதெல்லாம் அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதையே உணர்த்துகிறது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.' என அந்தப் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb