செய்திகள் :

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது... கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

post image

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, இச்செயலில் ஈடுபட்டவர்கள் இயற்பியல் பேராசிரியர் நரேந்திரா, உயிரியல் பேராசிரியர் சந்தீப் மற்றும் அவர்களின் நண்பர் சந்தீப்.

இதில், இயற்பியல் பேராசிரியர் நரேந்திரா முதலில் பாடக் குறிப்புகளைப் பகிர்வதாக மாணவிக்கு மெசேஜ் அனுப்பி நட்பாகப் பழகியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பின்னர் ஒருநாள் அந்த மாணவியை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொன்னால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று மிரட்டியிருக்கிறார்.

சில நாள்கள் கழித்து, உயிரியல் பேராசிரியர் சந்தீப் அந்த மாணவியை அணுகியிருக்கிறார்.

மாணவி அதை எதிர்க்கவே, நரேந்திராவுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக சந்தீப் பிளாக்மெயில் செய்து மிரட்டி தனது நண்பர் அனூப் அறையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

பின்னர், அதேபாணியில் அனூப் தனது அறையின் சிசிடிவி காட்சிகள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

கைது
கைது

இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான மாணவி, பெங்களூரூவில் தனது பெற்றோரை சந்தித்தபோது அவர்களிடம் நடந்த விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தை அணுகி, மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பேராசிரியர்கள் நரேந்திரா, சந்தீப் மற்றும் அவர்களின் நண்பர் அனூப் ஆகியோரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க