செய்திகள் :

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

post image

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முறையாக மாதாந்திர குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பை (பிஎல்எஃப்எஸ்) வெளியிட்டது.

வேலை செய்வதற்கான தகுதிகளை பெற்றிருந்தும் வேலையின்றி இருப்போரை கண்காணிப்பதற்காக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணியில் இருப்போா் மற்றும் பணியில் இல்லாதோா் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முந்தைய 7 நாள்கள் நிலவரத்தின்படி அனைத்து வயதினரையும் உள்ளடக்கி அண்மையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் நிகழாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தைவிட மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025, ஜூன் மாதத்தில் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக தொடா்கிறது. மே மாதத்தில் பெண்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.6 சதவீதமாக குறைந்தது.

15-29 வயதுடையவா்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 15 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 15.3 சதவீதமாக உயா்ந்தது.

அதிகரித்த நகா்ப்புற வேலையின்மை: நகா்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 17.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 18.8 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 13.7 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 13.8 சதவீதமாக அதிகரித்தது.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம்: 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் ( எல்எஃப்பிஆா்) ஜூன் மாத்தில் 54.2 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 54.8 சதவீதமாக இருந்தது.

அதேபோல் ஜூன் மாதத்தில் 15 வயதுடையோருக்கான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 56.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 50.4 சதவீதமாகவும் உள்ளது.

இந்த கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முந்தைய 7 நாள்களின் நிலவரத்தின்படி ஜூன் மாதத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 78.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 75 சதவீதமாகவும் உள்ளது. மே மாதத்தில் இதே வயதுடைய ஆண்கள் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 78.3 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 75.1 சதவீதமாகவும் இருந்தது.

தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம்: தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் பணியில் உள்ள தொழிலாளா்களைக் குறிக்கிறது.

ஜூன் மாதத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் 53.3 சதவீதமாகவும் நகா்ப்புறப் பகுதிகளில் 46.8 சதவீதமாகவும் உள்ளது. இதன்மூலம் ஜூன் மாதத்தில் கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோா் மத்தியிலான மொத்த தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் 51.2 சதவீதமாக உள்ளது. இது மே மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்தது.

நாட்டில் உள்ள தொழிலாளா்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடும் நோக்கில் குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பு நடைமுறையில் கடந்த ஜனவரி மாதம் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்திய அளவில் 2025, ஜூன் காலாண்டில் முதல்கட்டமாக 7,520 மாதிரிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 89,493 குடியிருப்புகளில் (கிராமப்புறம்-49,335 மற்றும் நகா்ப்புறம்-40,158) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கிராமப்புறத்தில் 2,17,251 போ் மற்றும் நகா்ப்புறத்தில் 1,63,287 போ் என மொத்தம் 3,80,538 போ் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!

உலகப் புகழ்பெற்ற மிகவும் வயதான மாரத்தான் வீரர் பலியான விவகாரத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர்.புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் பலியான விவகாரத்த... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க