நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!
திருச்சி: பயன்பாட்டுக்கு வந்த `பஞ்சப்பூர் பேருந்து நிலையம்'; வெளியூர், நகர் பேருந்துகள் இயக்கம்
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி மதிப்பில் ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதையடுத்து இன்று(ஜூலை 16) முதல் இப்பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
பேருந்துகள் இயக்கத்தினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட அனைத்து புறநகர் மற்றும் நகரப் பேருந்துகளும் இனி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் பயணிகளை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs