செய்திகள் :

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

post image

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.

இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், தேர்தல் வியூகங்களும் சூடுபிடித்திருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் களமிறங்கும் அதிமுக - எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அன்புமணி - ராமதாஸ் - பாமக
அன்புமணி - ராமதாஸ் - பாமக

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கப்பட்டு 37-ஆம் ஆண்டுகளாகியிருப்பது குறித்து, இன்று (ஜூலை 16) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாமக-வின் தலைவர் அன்புமணி, "பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா: வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!

மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும்.

அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வருமான வரி தாக்கல் காலம் இது. இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள... மேலும் பார்க்க

Air India Crash : `விடை தெரியாத கேள்விகள்' - AAIB அறிக்கையும் விமர்சனங்களும் - என்ன நடக்கிறது?

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இற... மேலும் பார்க்க

திருச்சி: பயன்பாட்டுக்கு வந்த `பஞ்சப்பூர் பேருந்து நிலையம்'; வெளியூர், நகர் பேருந்துகள் இயக்கம்

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி மதிப்பில் ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த... மேலும் பார்க்க

"இப்போதுதான் உயிரே வந்தது; அவரை கேரளாவிற்கு அழைத்து வருவோம்"- கேரள நர்ஸ் நிமிஷாவின் கணவர் பேட்டி

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வ... மேலும் பார்க்க

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதான்!

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வ... மேலும் பார்க்க

திருக்குறளே இல்லாத ஒன்றை 'குறள்'னு சொல்லி போட்டு இருக்காங்க! - ராஜ் பவன் மீது தமிழறிஞர்கள் வேதனை

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த விழாவில், மருத்துவர்களுக்கு வழங்கிய சான்றிதழில், இல்லாத ஒன்றை குறள் என அச்சிட்டு வழங்கியது புது சர்ச்சையைக் கிளப்ப... மேலும் பார்க்க