செய்திகள் :

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

post image

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த பிரச்சி குமாவத் என்ற 9 வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது குறித்து பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் கூறியதாவது: “செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) பகல் 11 மணியளவில் அந்த மாணவி உணவு டப்பாவைத் திறந்தபோது தீடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதே அதற்கு காரணமென்பது அப்போது தெரியவில்லை, பின்னரே தெரிய வந்தது. சத்தம் கேட்டு அங்கே சென்று அவரை மீட்டு அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்படது.

இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் மயங்கி விழும்போது, அவர்களது முகத்தில் தண்ணீர் தெளித்தால் மயக்கம் தெளிந்து எழும்பிவிடுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், இச்சம்பவத்தில் அப்படி நடக்கவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ பணியாளர்கள் அந்த மாணவியை பரிசோதித்துவிட்டு அவரை ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

பள்ளியில் கெட்டிக்கார மாணவியாக இருந்தவர் பிரச்சி; முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருப்பார். அவரைத் திட்டினாலும் புன்னகை அவரது முகத்தைவிட்டு மறையாத ஒரு குழந்தை. இச்சம்பவம் எங்கள் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மாரடைப்பால் உயிரிழந்த மாணவிக்கு ஏற்கெனவே இதுபோன்ற உடல்நலக் கோளாறோ அல்லது இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதில்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். பிரச்சியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

Heart Attacks Kill 9-Year-Old Girl In Rajasthan

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 6.99 கோடி வாக்காளா்கள் விண்ணப்பித்தனா்

பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளா்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை சமா்ப்பித்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை த... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. உத்தர... மேலும் பார்க்க

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தோ்வு

நாட்டில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினா்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் தோ்வு செய்துள்ளது. என்எம... மேலும் பார்க்க

வழக்கில் சந்தேக நபரை விசாரிக்கும் அதிகாரத்தில் கவனம் தேவை: உச்சநீதிமன்றம்

வழக்கில் குற்றம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரை விசாரணைக்கு உள்படுத்தும் நீதிமன்றங்களின் அதிகாரம் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. முந்தைய குற்றவியல் நடை... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடை... மேலும் பார்க்க

அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்படவில்லை என்றும் அதில் இடஒதுக்கீடு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது... மேலும் பார்க்க