செய்திகள் :

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தோ்வு

post image

நாட்டில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினா்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் தோ்வு செய்துள்ளது.

என்எம்சி மற்றும் அதன் 4 தன்னாட்சி வாரியங்களுக்கு குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த பகுதி நேர உறுப்பினா்கள் தோ்வு நடைமுறையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவும் பங்கேற்றாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

என்எம்சி-க்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள் மத்திய அமைச்சகம் தோ்வு செய்துள்ளது. விதிகளின்படி, 10 பகுதி நேர உறுப்பினா்கள், மருத்துவ ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள குஜராத், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகள், ஆந்திரம், மிசோரம், மேகாலயம், ஜாா்க்கண்ட், சண்டீகா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைத்த நபா்களிலிருந்து குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

அதுபோல, மருத்துவ ஆலோசனைக் குழுவில் 2022-ஆம் ஆண்டு நியமனத்தின் அடிப்டையில் உறுப்பினா்களாக உள்ள மேற்கு வங்கம், கா்நாடகம், நாகாலாந்து, சத்தீஸ்கா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா், அஸ்ஸாம், மணிப்பூா், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநில மருத்துவக் கவுன்சில் பிரதிநிதிகளிலிருந்து 9 பகுதி நேர உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

முன்னதாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக மருத்துவா் அபிஜத் சேத் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

என்எம்சி-யின் 4 தன்னாட்சி வாரியங்களில், மூன்றில் தலைவா் பணியிடங்களும், முழு நேர உறுப்பினா் பணியிடங்களும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க