செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

post image

சிதம்பரம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

டலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், அதிமுகவில் இணைந்தவர்களை எங்களில் ஒருவராக ஏற்கிறோம். மக்களுக்காக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அதிமுக. பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சியில் இணைந்தது பெருமை என்றார் எடப்பாடியார்.

நிகழ்ச்சிக்கு கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்வி ராமஜெயம், கே.ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ நாக.முருகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

Alternative party members join AIADMK in the presence of Edappadi Palaniswami

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலம் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் ம... மேலும் பார்க்க

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

காமராஜர் குறித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியி... மேலும் பார்க்க

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக... மேலும் பார்க்க

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம்: ஒருவர் வெட்டி கொலை, 2 பேர் காயம்

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம் காரணமாக இளம்பரிதி புதன்கிழமை இரவு மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கம்பம் ஜல்லிக்கட்டு தெரு... மேலும் பார்க்க

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: தனிப்படை விசாரணை

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திலுள்ள வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து தனிப்படை ப... மேலும் பார்க்க