செய்திகள் :

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

post image

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துரூஸ் இனமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வேடா மாகாணத்தில், அந்த இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவும், பொதூயின் ஆயுதக் குழுவினரும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தகையச் சூழலில், மோதலைக் கட்டுப்படுத்த சிரியாவின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் ஸ்வேடா நகரத்தினுள் நுழைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக் குழுவுக்கும், சிரியா ராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் தொடங்கியது. இதில், துருஸ் குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் களமிறங்கி சிரியா ராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தியது.

இந்நிலையில், டமாஸ்கஸ் நகரத்திலுள்ள ராணுவத் தலைமையகத்தின் மீது, நேற்று (ஜூலை 16) இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் தலைமையில், சிரியாவின் இடைக்கால அரசின் அதிகாரிகள் மற்றும் துரூஸ் இனத் தலைவர்கள் இடையில் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் மற்றும் துரூஸ் மதத் தலைவர்கள் விடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த ஜூலை 15 ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாகக் கைவிடப்பட்டதால், தற்போது இந்தப் போர்நிறுத்தமானது நீடிக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், போர்நிறுத்தம் தற்போது வரை அமலில் உள்ளதால், ஸ்வேடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அங்கிருந்து, நேற்று (ஜூலை 17) இரவு முதல் அரசுப் படைகள் வெளியேறி வருகின்றன.

முன்னதாக, துருஸ் இனக்குழுவும், பொதூயின் ஆயுதக்குழுவும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களிலும், ஆள் கடத்தல்களிலும் ஈடுபட்டு வந்தது மோதலாக உருவானது. இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை சிரியா அரசு இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனால், இந்த மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றால் சுமார் 374 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல... மேலும் பார்க்க

இராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!

இராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாசிட் மாகாணத்தின் குட்... மேலும் பார்க்க

ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜரும் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் தங்களுக்கென தனி ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: "மழைக்கால அவசரநிலை" அறிவிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலையை" அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ... மேலும் பார்க்க