செய்திகள் :

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

post image

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 ஆகிய ஏவுகணைகளின் சோதனைகள் இன்று (ஜூலை 17) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சோதனைகளின் மூலம் ஏவுகணைகளின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகளைச் சரிபார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளில், முதலில் அக்னி - 1 ஏவுகணை அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட சில மணி நேரம் கழித்து, பிருத்வி ஏவுகணை சந்திப்பூரிலுள்ள ஐடிஆரின் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

India has reportedly successfully test-fired its Prithvi-2 and Agni-1 missiles in the Odisha coast.

நேட்டோவின் பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி!

ரஷியாவுடன் வா்த்தகத்தைத் தொடா்ந்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் விடுத்த அச்சுறுத்தலுக்கு, ‘இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் ... மேலும் பார்க்க

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க