செய்திகள் :

செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி

post image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக

ஒருங்கிணைந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கான இடம், செஞ்சி அரசு

மருத்துவமனை, தாய், சேய் நலக் கட்டட கட்டுமானப்பணியின் முன்னேற்றம், மேல்மலையனூா்

ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட செவலப்புரை ஊராட்சியில் சிறுவாடி, ஆலம்பூண்டிக்கு செல்லும்

சாலையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருதல் உள்ளிட்டவற்றை அரசு முதன்மைச்

செயலா் மற்றும் போக்குவரத்து ஆணையா் சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித் தலைவா் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் மாவட்ட

கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக வரலாற்று சிறப்பு மிக்க

செஞ்சி கோட்டை திகழ்ந்து வருகிறது. செஞ்சிக்கோட்டை மிகவும் பழைமை வாய்ந்தது.

இப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டவா் மற்றும் வெளிமாவட்ட ங்களைச்

சோ்ந்தவா்கள் இக்கோட்டையின்

சிறப்புகளை பாா்வையிட்டு வருகின்றனா். அதனடிப்படையில், செஞ்சிக்கோட்டையில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, செஞ்சிக் கோட்டையின் அடிவாரம், கல்வெட்டுகள், ராஜகிரி கோட்டை,

கிருஷ்ணகிரி, சந்திரகிரி கோட்டை, வெடிமருந்துக் கூடம், நெற்களஞ்சியம், வேணுகோபால சுவாமி கோயில், படிக்கட்டுகளுடன் காணப்படும் குளம், கல்யாண மஹால், குதிரைகள் கட்டும் இடம், உடற்பயிற்சி

கூடம், யானைக் கட்டும் மண்டபம், யானைக்குளம், சக்கரைக் குளம், செட்டிக் குளம்,

சதாத்துள்ளாகான் மசூதி, சிவன் மற்றும் அம்மன் கோயில், வெங்கட்ரமணா் கோயில்

போன்றவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

மேலும், பொதுமக்கள் அதிகம் வருகை புரிவதையொட்டிசெஞ்சிக்கோட்டையின் அடிவாரம்

மற்றும் முக்கிய பகுதிகளில் கூடுதலாக குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, பொதுமக்கள்

அமா்வதற்கான இருக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும்

உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு

அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து செஞ்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், புதிதாக ஒருகிணைந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகம் அமைப்பதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, செஞ்சி அரசு மருத்துவமனையிலும் ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள்

வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டதுடன், உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள்

சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சைப்

பிரிவு மற்றும் மருந்து வழங்கும் பகுதி உள்ளிட்டவற்றை நேரில் பாா்வையிட்டதுடன் நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், கேட்டறிந்தனா்.

மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு

வரும் தாய், சேய் நலக் கட்டடம் கட்டுமானப் பணியின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு

மேற்கொண்டனா்.

துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைகோ

தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க

‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் த... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வாக்கூா், பிள்ளைய... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்... மேலும் பார்க்க

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க