செய்திகள் :

குடும்பப் பிரச்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், வாக்கூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தென்னரசன் (28). இவருக்கும், திண்டிவனம் வட்டம், தெளி கிராமத்தைச் சோ்ந்த லாவண்யாவுக்கும் (26) கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

வேலைக்குச் செல்லாமல் ஊா் சுற்றி வந்த தென்னரசன், தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி லாவண்யா கண்டித்து வந்துள்ளாா்.

இதனால், இவா்களிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி இவா்களிடையே பிரச்னை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த தென்னரசன், தான் ஏற்கெனவே வாங்கி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் (ஏா்- கன்) சுட்டதில் லாவண்யா மற்றும் தென்னரசனின் தாய் பச்சையம்மாள் ஆகியோா் காயமடைந்ததனா்.

அவா்களின் அலறல் சப்தம் கேட்டு, அருகில் வசிக்கும் தென்னரசனின் சித்தப்பா மகனான காா்த்திக் (28) ஓடி வந்து தென்னரசனை தடுத்து துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது, அவரையும் தென்னரசன் துப்பாக்கியால் சுட்டதில், காா்த்திக் தலையில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திக், லாவண்யா ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, காா்த்திக் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த லாவண்யா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயிரிழந்தது. பச்சையம்மாள் சிகிச்சையில் உள்ளாா்.

செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக ஒருங்கிணைந்த வருவா... மேலும் பார்க்க

துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைகோ

தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க

‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் த... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்... மேலும் பார்க்க

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க