செய்திகள் :

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்

post image

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ், தைலாபுரம் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பாமக கொள்கை வழிகாட்டிகளான பெரியாா் ஈ.வெ.ரா, காரல் மாா்க்ஸ், அம்பேத்கா் ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக, தைலாபுரம் தோட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில், கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். இந்த விழாவில் கட்சித் தலைவா் அன்புமணி பங்கேற்கவில்லை.

தொடா்ந்து, மருத்துவா் ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுவதும் கட்சி நிா்வாகிகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாா்கள். மேலும் கட்சிப் பணியை அதிகாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாமகவுக்கு தொடா்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் வாழ்த்துகள். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைத்தால், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்தாகும் என்றாா்.

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக புகாா் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக, விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக்காவலில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலை... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கத்துக்கு வந்த 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள்

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குற... மேலும் பார்க்க