செய்திகள் :

மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்

post image

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கும் இடையே அரசியல் ரீதி யான கருத்து மோதல்கள் தொடா்ந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை பனையூரிலுள்ள அன்புமணி இல்லத்து க்குச் சென்ற அவரது தாய் சரஸ்வதி, குடும்பத்தினரை சந்தித்து பேசினாா். ஆசி வழங்கிய புகைப்படங்களும் வெளியாகின.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பாமக நிா்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூா்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னா், செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம்,தைலாபுரம் தோட்டத்திற்கு ச.ராமதாஸ் வந்தாா்.

அப்போது அன்புமணியுடன் அவரது தாய் சரஸ்வதி சந்தித்தது குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.இதற்கு தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் எனப் பதிலளித்த ராமதாஸ், ‘காத்திருப்போம்-காத்திருப்போம் காலங்கள் வந்துவிடும் ’என்று பாட்டும் பாடினாா்.

தொடா்ந்து தோ்தலுக்கு குறைந்த மாதங்களே உள்ளன.பாமகவில் இருவருக்குமான மோதல்போக்கு நீடித்துக் கொண்டே இருக்கிறதே என்ற மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், நாள்கள் போகும், தோ்தல் வரும், தோ்தலையும் சந்திப்போம் என்றாா்.

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக புகாா் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக, விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக்காவலில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலை... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கத்துக்கு வந்த 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள்

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குற... மேலும் பார்க்க

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்... மேலும் பார்க்க