செய்திகள் :

டிரம்ப்புடன் பேசியது என்ன? நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்க வேண்டும்! காங்கிரஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசிய மோடி, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என கறாராக தெரிவித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில், இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தியாளருடன் பேசியதாவது:

“அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருமித்த கருத்து இருந்தால்தான் நாடாளுமன்றம் முறையாக செயல்படும். ஒருமித்த கருத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. துரதிர்ஷ்டவசமாக, கடந்த 11 ஆண்டுகளாக மசோதாக்கள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

கடந்த 66 நாள்களில் 23 முறை, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தவும் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தவும் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. டிரம்ப்புடன் தொலைபேசியில் மோடி என்ன பேசினார் என்பதை நாடாளுமன்றத்தில் அவர் விளக்க வேண்டும் என விரும்புகிறோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பிரச்னையையும் எழுப்புவோம். வாக்காளர்களின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குடியுரிமையை நிரூபிப்பது தேர்தல் ஆணையத்தில் பொறுப்பு அல்ல. பேரவைத் தேர்தலுக்கு முன்பு நடத்தப்படுவது ஏன்? பிகாரில் அச்சமான சூழல் நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Congress General Secretary Jairam Ramesh has said that Prime Minister Narendra Modi should give an explanation in the upcoming Parliament session on the issue of the cessation of hostilities between India and Pakistan.

இதையும் படிக்க : தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம்!

சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்குப் பாராட்டு: மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்!

புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதை வரவேற்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை(ஜூலை 16) தீர்மானம் நிறைவேற்றி... மேலும் பார்க்க

தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான எல்லையானது தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகண்டில் வரும் ஜூலை 24 மற்றும் 28 ஆகிய தேதிக... மேலும் பார்க்க

ஹிமந்தா நிச்சயம் சிறைக்குச் செல்வார்: ராகுலின் கூற்றுக்கு அஸ்ஸாம் முதல்வர் பதில்!

மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தின்போது ஹிமந்தா நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு அஸ்ஸாம் முதல்வர் பதில் கூறியுள்ளார். இதுத... மேலும் பார்க்க

இனி அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் ரூ.200 மட்டுமே! ஆனால் இங்கில்லை..

கர்நாடகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அம்மாநில அரசு கருத்துக்கேட்பு நடத்தப்படவுள்ளது.வாரம் முழுவதும் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சாமானியர்களுக்கு வார இறுதி நாள்களில்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ தனி அறக்கட்டளை: டாடா குழுமம்

ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ புதிதாக அறக்கட்டளை ஒன்றை நிறுவ டாடா குழுமம் ஆலோசித்து வருவதாக டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாத... மேலும் பார்க்க