செய்திகள் :

தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

post image

பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் மாவட்டத்தில், சீக்கியர்களின் புனிதத் தலமான, ஹர்மந்தீர் சாஹிப் என்றழைக்கப்படும் தங்கக் கோயிலுக்கு, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கோயில் நிர்வாகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தங்கக் கோயிலின் பைப்புகளினுள் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கக் கோயிலுக்கு வருகைத் தரும் சூழலில், வெடிகுண்டு மிரட்டல்களினால் அன்றாட வழிபாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

ஏற்கனவே, கடந்த 2 நாள்களாக கோயில் வளாகத்தினுள் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள சூழலில், கூடுதல் படைகள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபர்களை அடையாளம் கண்டுபிடிக்க சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்கக் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து காவல் துறையினர் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க