செய்திகள் :

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அதிசயம்!

post image

விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது வழக்கமான நீர்வீழ்ச்சி போன்றில்லாமல் கடலின் அடியில் பாய்கிறது.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையேயான கடலுக்கு அடியில் அமைந்த இந்த நீர்வீழ்ச்சி நேரடியாக பார்க்கமுடியாத வண்ணம் உள்ளது.

கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி, டென்மார்க் நீரிணைப் பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகிறது. வழக்கமான நீர்வீழ்ச்சிகள் பாறைகளில் இருந்து நீர் விழுவதைப் போலல்லாமல், இது வெவ்வேறு அடர்த்தி, வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை கொண்ட கடல் நீரோட்டங்கள் ஒன்றிணைவதால் ஏற்படுகிறது. இந்த நீரோட்டங்கள் கடலின் ஆழத்தில் பாய்ந்து, ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போன்ற விளைவை உருவாக்குகின்றன.

meta AI

இந்த கடலடி நீர்வீழ்ச்சி, உலகின் மிக உயரமான மேற்பரப்பு நீர்வீழ்ச்சியான வெனிசூவெலாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட நான்கு மடங்கு உயரமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சுமார் 3.5 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்து கடலடியில் பாயுமாம். இதன் அளவும், வேகமும் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எப்படிக் கண்டறியப்பட்டது?

கடலின் ஆழத்தில் நீரோட்டங்களை அளவிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறப்பு கருவிகள், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ஆழ்கடல் ஆய்வு உபகரணங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நீர்வீழ்ச்சி மனிதர்கள் நேரடியாக பார்க்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இது கடலின் ஆழத்தில் வெவ்வேறு நீரோட்டங்களின் ஒன்றிணைப்பால் உருவாகிறது.

வெவ்வேறு வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை கொண்ட நீர் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, அது ஒரு பெரிய நீரோட்டமாக கடலடியில் பாய்கிறது. இதனால், இதை நேரடியாக பார்க்க முடியாத வகையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் மறைந்திருக்கும் அதிசயம்

இந்த கண்டுபிடிப்பு, கடலின் மர்மங்களை மேலும் ஆராய விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களால் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், இந்த நீர்வீழ்ச்சி இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

"விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் சுபான்ஷு சுக்லா" - பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகி... மேலும் பார்க்க

சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.ஷாங்காய் ஜியாவோ டோங் பல... மேலும் பார்க்க

மனித மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்றும் AI-யை உருவாக்கும் விஞ்ஞானிகள்; எப்படி தெரியுமா?

மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு AI அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்ற AI மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்.மருத்து... மேலும் பார்க்க

`ரைஸ் குக்கர்' கண்டுபிடித்தது யார் தெரியுமா? சமையலில் புரட்சியை ஏற்படுத்திய குடும்பத்தின் கதை!

பெரும்பாலான வீடுகளில் மின்சார ரைஸ் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரைஸ் குக்கரை பயன்படுத்துவது நோக்கம் சமையல் நேரத்தை குறைப்பதாகும். மேலும் அதுவே அரிசியை சோறாக மாற்றி சாப்பிடும் வரை சூடாக வைத்திருக... மேலும் பார்க்க