செய்திகள் :

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்: திடீா் வெள்ளம், நிலச்சரிவுகளுக்கும் வாய்ப்பு!

post image

‘செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீா் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையையொட்டிய ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிா்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 சதவீதம் அதிகமாகும். ஆகஸ்டில் 268.1 மி.மீ. மழை பதிவானது. இது, சராசரியைவிட 5.2 சதவீதம் அதிகம். வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ. மழை பதிவானது. கடந்த 2001-க்கு பிறகு இதுவே அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

தென் தீபகற்ப பகுதியில் ஆகஸ்டில் பதிவான மழையளவு 250 மி.மீ. இது, இயல்பைவிட 31 சதவீதம் அதிகம். தற்போதைய பருவமழைக் காலத்தில் கடந்த மூன்று மாதங்களிலுமே இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.

செப்டம்பரில் நீண்டகால சராசரியைவிட 109 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபகற்ப பகுதிகளைத் தவிா்த்து, நாடு முழுவதும் பரவலாக அதிக மழைப்பொழிவு காணப்படும்.

உத்தரகண்டில் திடீா் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நேரிட வாய்ப்புள்ளது. இம்மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகள் பாதிக்கப்படக் கூடும். ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் மழை-வெள்ள பாதிப்புகள் இருக்கும்.

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வழக்கமாக ஒடிஸா வழியாக கடந்து செல்லும். இம்முறை மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்து சென்றன. இதன் தாக்கத்தால் வடமேற்கு இந்தியாவில் அதிக பாதிப்புகள் நேரிட்டுள்ளன.

பஞ்சாபில் பல்லாண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து மேகவெடிப்புகளால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் சிறிய அளவிலான மேகவெடிப்புகள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது என்றாா் அவா்.

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்... மேலும் பார்க்க

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க