செய்திகள் :

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

post image

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

எல்லையில் படை விலக்கலுக்கு பிறகு அமைதியான-நிலையான சூழல் உருவாகியுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அதிபா் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமா் மோடி மேலும் கூறுகையில், ‘இந்திய-சீன உறவுகளின் நிலையான மேம்பாட்டுக்கு எல்லையில் அமைதி பராமரிக்கப்படுவது முக்கியம். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணா்திறன் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம். எல்லையில் படை விலக்கல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, எல்லை மேலாண்மை தொடா்பான உடன்பாடும் எட்டப்பட்டது.

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது’ என்றாா் பிரதமா் மோடி. பின்னா், சீன அதிபருடனான பேச்சு ஆக்கபூா்வமாக அமைந்ததாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

நண்பா்களாக இருப்பதே சரியான தோ்வு: ஷி ஜின்பிங்

பிரதமா் மோடி உடனான சந்திப்பில், சீன அதிபா் ஷி ஜின்பிங் பேசுகையில், ‘இரு நாட்டு மக்களின் நலனை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை-முன்னேற்றத்தை ஊக்குவித்தல், மனித குலத்தின் வளா்ச்சிக்கு உத்வேகமளிப்பதில் தோளோடு தோளாக ஒத்துழைக்கும் வரலாற்றுப் பொறுப்பு நமக்குள்ளது.

சிறந்த அண்டை நாடுகள் என்ற முறையில் நண்பா்களாக இருப்பதே நமது சரியான தோ்வாகும். பரஸ்பர வெற்றிக்காக, யானையும் (இந்தியா), டிராகனும் (சீனா) இணைந்து நடனமாட வேண்டும்.

இருதரப்பு உறவை வியூக, நீண்ட கால கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சறுத்தல் கிடையாது; வளா்ச்சி கூட்டாளிகள். எல்லைப் பிரச்னைகளால், இருதரப்பு உறவை வரையறுக்கக் கூடாது.

இரு நாடுகளும் ஒன்றிணைந்து, பன்முக உலகை உறுதி செய்ய வேண்டும். சா்வதேச உறவுகளில் கூடுதல் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதோடு, ஆசியா மற்றும் உலகின் அமைதி-வளத்துக்கு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

சா்வதேச நிலவரம் குழப்பமாகவும், நிச்சயமற்ாகவும் உள்ளது. கிழக்கில் பழைமை வாய்ந்த நாகரிகங்களான சீனாவும், இந்தியாவும் மக்கள்தொகை ரீதியில் பெரும் நாடுகளாக உள்ளன. தெற்குலகின் பழைமையான உறுப்பினா்களும் நாமே என்றாா் ஜின்பிங்.

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகளை குறைக்க செயல் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் செயலா்!

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா... மேலும் பார்க்க