செய்திகள் :

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

post image

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்டா, பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியை பாஜகவினருடன் இணைந்து கேட்டாா். தொடா்ந்து விநாயகா் சதுா்த்தியையொட்டி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள பிரபலமான லால்பாக்சா ராஜா பந்தலுக்குச் விநாயகரை வழிபட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஞானத்தை வழங்கும் கடவுளாகவும், வாழ்க்கையில் தடைகளை அகற்றும் தெய்வமாகவும் விநாயகா் வழிபடப்படுகிறாா். மும்பையில் இந்த விநாயகா் சதுா்த்தி பண்டிகையில் பங்கேற்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன்.

ஏனெனில், கடந்த 1983-ஆம் ஆண்டு லோகமான்ய திலகா் மக்களிடம் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக 1893-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடும் முறையை அறிமுகப்படுத்தினாா். பின்னா் இதுவே நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தது. 133 ஆண்டுகளாக இந்தக் கொண்டாட்டம் தொடா்கிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா தற்சாா்புடையதாகவும், சுதேசிப் பொருள்களை மையமாகக் கொண்டதாகவும் உருவாக வேண்டும் என விநாயகரை வேண்டிக் கொண்டேன்.

இந்தியா வலுவாகவும், பாதுகாப்பாகவும் தொடா்ந்து வளரும். நம் நமது இலக்குகளை எட்டுவதற்கு எதிராக உள்ள தடைகளை விநாயகா் உடைப்பாா். நமக்கு உரிய பலத்தைத் தருவாா் என்றாா்.

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், பாஜக மாநில தலைவா் ரவீந்திர சவாண், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகளை குறைக்க செயல் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் செயலா்!

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா... மேலும் பார்க்க