செய்திகள் :

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.

அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவிட்டு இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். கடைசியாக தனது தோழியைப் பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு வார விசாரணைக்குப் பிறகு மாயாகரின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது அந்த போன் புனே அருகில் உள்ள கண்டாலா என்ற மலைப்பகுதியில் இருப்பதாகக் காட்டியது.

கொலை
கொலை

உடனே போலீஸார் அங்குச் சென்று அப்போனை வைத்திருந்த துர்வாஸ் தர்சனைப் பிடித்து விசாரித்தனர். தீவிர விசாரணையில் மாயாகரைக் கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

போலீஸார் உடனே அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்தபோது, துர்வாஸ் தனது காதலியைக் கைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தது மாயாகருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என்று மாயாகர் நிர்ப்பந்தம் செய்துள்ளார்.

இதனால் தனது நண்பர்கள் இரண்டு பேரின் துணையோடு மாயாகரை கண்டாலாவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாயாகர் உடல் போடப்பட்ட இடத்தில் தேடி அவரது உடலைக் கண்டுபிடித்தனர்.

இக்கொலையில் துர்வாஸிற்கு உதவியை அவரது இரண்டு நண்பர்கள் விஷ்வாஸ் பவார், சுஷாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மாயாகர் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்துள்ளார். எனவே தர்சன் தனது காதலியை கண்டாலாவிற்கு வரவைத்து கொலை செய்துள்ளார். தர்சன் கண்டாலாவில் பீர் பார் மற்றும் ஒயின் ஷாப் நடத்தி வந்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து... மேலும் பார்க்க

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந... மேலும் பார்க்க

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச்... மேலும் பார்க்க

`திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் வா...' - மகளின் காதலனை தனி அறையில் அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பே... மேலும் பார்க்க