செய்திகள் :

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மது குடிக்கச் சென்றிருக்கிறார். பூட்டிக்கிடந்த ஒரு கடை அருகே மது குடிப்பதற்காக அமர்ந்துள்ளனர்.

அப்போது நண்பர்கள் யார் அதிக மது குடிப்பார்கள் பார்க்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து நண்பர்கள் மதுக் குடிக்கும் போட்டி வைத்துள்ளனர். அதன்படி ஒரு ஃபுல் பாட்டில் மதுவை தண்ணீர் கலக்காமல் ராவாகக் குடித்துவிட்டு, தள்ளாடாமல் நிற்க வேண்டும் என்பதுதான் போட்டி.

அந்தப் போட்டியில் கலந்துகொண்ட சுபின் ஒரு ஃபுல் பாட்டில் மதுவை தண்ணீர் சேர்க்காமல் ராவாகக் குடித்திருக்கிறார். அதன்பின்னர் அவரால் தள்ளாடாமல் நிற்க முடியவில்லை. மது குடித்த சிறிது நேரத்தில் ஒரு கடைத்திண்ணையில் மயங்கிக் கிடந்தார். 

சுபினை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்
சுபினை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்

ஃபுல் பாட்டில் மது குடித்த சுபினுக்கு மயக்கம் தெளியும் என நண்பர்கள் சிறிதுநேரம் காத்திருந்தனர்.  இரவு வெகுநேரமாகியும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. பேச்சு மூச்சற்று கடைத்திண்ணையில் கிடந்த சுபினைத் தட்டி எழுப்ப முயன்றனர் நண்பர்கள்.

ஒருகட்டத்தில் சுபினிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதையடுத்து சுபின் இறந்துவிட்டதாகக் கருதினர் நண்பர்கள். ஏற்கனவே போதையிலிருந்த சக நண்பர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தனர். சுபினிடம் மதுக்குடிக்கும் போட்டி வைத்தவர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினர். 

மருத்துவமனையில் சுபின்
மருத்துவமனையில் சுபின்

பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக என்ன செய்யலாம் என யோசித்த நண்பர் ஒருவர், குளச்சல் போலீஸுக்கு போன் செய்து, கடைத்திண்ணையில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது சுபினின் உடலில் அசைவு தெரிந்தது. உடனே போலீஸார் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து சுபினை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்க... மேலும் பார்க்க

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.அவர் என்ன ஆனார் என்று த... மேலும் பார்க்க

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந... மேலும் பார்க்க

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச்... மேலும் பார்க்க