செய்திகள் :

இந்தியா - ரஷியா இடையேயான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது! புதின்

post image

இந்தியா - ரஷியா இடையேயான உறவு எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இன்று காலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் ஒரே காரில் புறப்பட்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் அரங்குக்குச் சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது புதின் பேசியதாவது: ”பிரதமர் மோடியைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய தெற்கு மற்றும் கிழக்கு மக்களை ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பாக எஸ்சிஓ உச்சிமாநாடு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாம் சந்திப்பது பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச அமைப்புகளாக ஐ.நா., பிரிக்ஸ் என அனைத்திலும் ஒன்றாகக் குரல் எழுப்புகிறோம். இன்றைய சந்திப்பு நமது ஒருங்கிணைந்த பாதையை மேலும் வலுப்படுத்தும். ரஷியாவும் இந்தியாவும் நம்பகமான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இது எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டது. மக்கள் நமது உறவை ஆதரிக்கின்றனர்” எனத் தெரிவித்தார். இதனிடையே, புதினுடனான சந்துப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ”வர்த்தகம், உரங்கள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Russian President Vladimir Putin said during bilateral talks that the India-Russia relationship is beyond any politics.

இதையும் படிக்க : தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

காபூல்: ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன.கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 80... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர்.இந்த விபத்தில், ஒரு விமானம் தீப்... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான சவால்: எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி!

பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்து... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 400க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியிருந்ததாகவும், ... மேலும் பார்க்க

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது சின்வாா் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தை ஹமாஸ் சனிக்கிழமை உறுதி செய்தது.2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கு... மேலும் பார்க்க

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா். அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வர... மேலும் பார்க்க