செய்திகள் :

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

post image

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் மஞ்சு பிரகாஷ்(41). இவர் தனது காலணிக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து வெள்ளிக்கிழமை பலியானார். ஆனால் பாம்பு கடித்தது கூட அறியாமல் காலணியோடு அரை மணி நேரம் நடந்ததால், பாம்பும் காலணிக்குள்ளேயே உயிரிழந்தது.

இதுகுறித்து மஞ்சுவின் தம்பி ஹரிஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில், தனது சகோதரர் கரும்புச் சாறு வாங்க காலணியை அணிந்துகொண்டு வெளியே சென்று சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தொழிலாளி ஒருவர், காலணிக்குள் குட்டி பாம்பைக் கவனித்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். பிறகு என் தந்தை பரிசோதித்தபோது பாம்பு இறந்து கிடந்தது தெரியவந்தது. என் சகோதரர் காலணியை முன்பே அணிந்திருந்தார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

அவரது அறையில் சோதனை செய்தபோது, ​​அவர் மயக்கமடைந்து வாயிலிருந்து நுரை வந்ததைக் கண்டோம். அவரது மூக்கிலும் ரத்தம் இருந்தது. நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்," என்று அவர் கூறினார்.

பாம்பு கடித்ததில் மஞ்சுவுக்கு எந்த உணர்வும் தென்படவில்லை என்ன என கேட்டதற்கு ஹரிஷ் கூறுகையில், தனது சகோதரருக்கு 2016 ஆம் ஆண்டு பேருந்து விபத்துக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதனால் அவரது காலில் உணர்வு இல்லாமல் போனதாகவும் பதிலளித்தார்.

பன்னர்கட்டா போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கைப் பதிவு செய்தனர்.

A 41-year-old software professional died after he was bitten in the toe by a Russell’s viper that was hiding inside his clog slipper.

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார். பி... மேலும் பார்க்க

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்ட... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க