செய்திகள் :

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

post image

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் வாக்குரிமை பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"சமத்துவம் பற்றி பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், இப்போது பாஜக - ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைந்திருக்கிறார். அவருக்கான அந்த சமத்துவ கொள்கை எங்கு போனது? ஏனெனில் பாஜகவின் மடியில் அவர் அமர்ந்திருக்கிறார். ஆர்எஸ்எஸ்-பாஜக இறுதியில் நிதீஷ் குமாரை தூக்கி எறியும்.

பிகாரில் வாக்குரிமை பேரணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதுமே இதைப்பற்றி பேசுகிறார்கள். அதை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் பிகார் மக்களும் எங்கள்(மகாகத்பந்தன்) கூட்டணியும் பின்வாங்கவில்லை.

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வாக்குகளைத் திருடுகிறார், அடுத்து வங்கிகளை கொள்ளையடிப்பவர்களை பாதுகாப்பதன் மூலமாக பணத்தைத் திருடுகிறார்.

வாக்குத் திருட்டு மூலமாக பிகாரில் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார். அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை எனில் மோடியும் அமித் ஷாவும் உங்களை அடக்கிவிடுவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இரட்டை என்ஜின் அரசு இன்னும் சில மாதங்களில் கவிழும். பதிலாக ஏழைகளின், பெண்களின், தலித்துகளின், பிற்படுத்தப்பட்டோரின் அரசு அமையும்" என்று பேசியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

Congress President Mallikarjun Kharge targets PM Modi that he has a habit of stealing

ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்? விடியோ வெளியாகி பரபரப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி ப... மேலும் பார்க்க

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி: ரூ.1.86 லட்சம் கோடி வசூல்!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017... மேலும் பார்க்க

சினாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஜம்மு - காஷ்மீரில் முக்கிய அணைகளின் அனைத்து மதகுகளும் திறப்பு!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீராதாரமான சினாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்ட... மேலும் பார்க்க

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் ம... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க