செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் எந்நேரமும் மேட்டூர் அணையின் உபரி நீர், மதகுகள் வழியாகத் திறக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், மேட்டூர் அணை உபரி நீர் போக்கி கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம்பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், தொட்டில் பட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை சுமார் 5 மணி அளவில் உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்வரத்தும் திறக்கும் இதே நிலையில் இருந்தால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணை ஆறாவது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்பு 92.64 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிக்க | அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.டிஎன்பிஎஸ்சி-யின் கவனக் குறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்... மேலும் பார்க்க

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, இனி அனைத்து இடங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது. சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது. உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ ... மேலும் பார்க்க