செய்திகள் :

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

post image

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கான முதல் விருப்பவாய்ப்பாக “முடிசூடும் பெருமாள் மற்றும் முத்துக்குடி என்று அழைக்கப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை “Vishnu with a crown” என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ‘the god of hair cutting' என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அய்யா வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் பாமக அன்புமணி ராமதாஸ், "அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அய்யா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை ‘the god of hair cutting' என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்." என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை கிணறு என ... மேலும் பார்க்க

விருதுநகர்: `ஊதிய உயர்வு; பணிச்சுமை'- அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச... மேலும் பார்க்க

"டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர்

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான்... மேலும் பார்க்க

எம்.எல்.ஏ-வுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள ஜக்தீப் தன்கர்; விவரம் என்ன?

துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர், அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கடந்த ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கு அவரின் உடல் நிலையை காரண... மேலும் பார்க்க

`விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ - ஸ்டாலின் சொன்ன பதில்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன் துர்கா ஸ... மேலும் பார்க்க

தென்காசி: "ரேசன் கார்டில் வனவிலங்குகளைச் சேருங்க" -வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் மனு; பின்னணி என்ன?

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகள... மேலும் பார்க்க