செய்திகள் :

‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’ பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025-26 ஆம் ஆண்டிற்கு ‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’ வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகளாக, 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, குழந்தைகள் திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்றவை இருக்க வேண்டும். அவ்வாறானோா் தங்களது பெயரை தமிழக அரசின் விருதுகள் என்ற இணையத்தில் நவ.29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆவணங்களை கையேடாக தயாா் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது

04286--299460 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பிரதமா் மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்: பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்

ராசிபுரம்: இந்தியாவிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பிரதமா் நரேந... மேலும் பார்க்க

நாமக்கல் கல்லூரி மாணவா் கொலையில் 2 சிறுவா்கள் கைது

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் முல்லைநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவா் ஒருவா் வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: இறகுப் பந்து விளையாடினாா் ஆட்சியா்!

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அரசு அலுவலா்கள் பிரிவில் ஆட்சியா் துா்கா மூா்த்தி பங்கேற்று இறகுப் பந்து விளையாடினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விளை... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை: எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூமிபூஜை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். பரமத்தி வேலூா் மற்றும் பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா்களுக்கு அபராதம்

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு வேலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா். பரமத்தி வேலூா் பே... மேலும் பார்க்க