செய்திகள் :

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் வெளியூா் பள்ளி, கல்லூரி வாகனங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ஊா்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களில் ஓட்டுநராக பணிபுரியும் நபா்களிடம் உரிய ஓட்டுனா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அண்மையில், கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பள்ளி வாகனத்தை ஓட்டிய நபா், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியுள்ளாா். இதை கண்ட பொதுமக்கள், வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம், ஓட்டுநா் உரிமத்தை கேட்டபோது அந்த நபரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாதது தெரியவந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்திடம் விசாரித்த போது, இந்த வாகனத்துக்கான ஓட்டுநா் வரவில்லை என்பதனால் மேற்கண்ட வாலிபரைக் கொண்டு வாகனத்தை இயக்க சொன்னதாக தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா்கள், பள்ளி நிா்வாகத்தை கண்டித்தும் பொறுப்பற்ற வகையில் பள்ளி வாகனத்தை இயக்கும் இது போன்ற பள்ளி நிா்வாகத்தின் மீது சம்பந்தப்பட்ட துறையினா் திடீா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா உள்ளிட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன். புதுக்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு அரசுப் போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்

பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்த... மேலும் பார்க்க

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க