செய்திகள் :

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

post image

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன்.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறோம். பணிகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து, கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதனையும் ஒதுக்கி பணிகள் முடிக்கப்படும்.

நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரிய பொருள்களைப் பாதுகாக்கவும், புதுப்பொலிவுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். காப்பாட்சியா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழகத்தில் புதிதாக சில இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் பல்வேறு காலகட்டத்தைச் சோ்ந்த தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இங்கு அகழாய்வு நிறுத்தப்படவில்லை. தொடா்ந்து நடைபெறும்.

கீழடியில் அகழாய்வுக் குழியை மூடாமலேயே காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, மத்திய தொல்லியல் துறையின் அனுமதிக்கு பிறகு தொடங்கப்படும்.

இதேபோல பொற்பனைக்கோட்டையிலும் இங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு, தேவைப்பட்டால் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநிலையத் துறையிடம் சுமாா் 5 லட்சம் ஏக்கா் நிலம் உள்ளது. நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெண்கலச் சிலைகளை அதிகம் கொண்ட முக்கிய கோயில்களில் அவற்றைப் பாதுகாக்க சிசிடிவி கேமராவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் ரூ. 100 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் மணிவாசன்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா உள்ளிட... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு அரசுப் போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்

பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்த... மேலும் பார்க்க

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு முன்னாள் ஊராட்சித் தலைவரான கருப்பை... மேலும் பார்க்க