செய்திகள் :

பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்

post image

பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட வேலை வாய்ப்பக பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியா் நியமனங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றும் தொடக்கக் காலம் முதலே தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி வந்துள்ளது.

இந்நிலையில், பதவி உயா்வு கோருவது குறித்து தனிப்பட்ட முறையில் ஒரு சில ஆசிரியா்கள் தொடா்ந்த வழக்கில், சமூக ஊடகங்களில் பரவிவரும் தீா்ப்பின் அம்சங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகள் பணி அனுபவத்துடன், முறையான கல்வித் தகுதியுடன் அா்ப்பணிப்பு உணா்வோடும் பணியாற்றிவரும் அனைத்து வகையான தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வருவது துரதிருஷ்டவசமானது.

இத்தகைய பின்னணியில் தமிழ்நாடு அரசு உடனடித் தலையீடு செய்து ஒரு கொள்கை முடிவெடுத்து 2012-ஆம் ஆண்டுக்கு முன்பு பணி அமா்த்தப்பட்ட ஆசிரியா்களின் அச்சத்தை களைதல் வேண்டும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி இல்லை என்ற காரணங்கள் மற்றும் வரையறைகள் இன்றி பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் பணிமூப்பின் படி பதவி உயா்வுகள் வழங்க வேண்டும்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா உள்ளிட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன். புதுக்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு அரசுப் போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்த... மேலும் பார்க்க

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு முன்னாள் ஊராட்சித் தலைவரான கருப்பை... மேலும் பார்க்க