செய்திகள் :

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் புதன்கிழமை பவுன் ரூ.78,4400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

கடந்த ஆக. 29-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.76,960-க்கும், செப்.1 -இல் ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கும், செப்.2 -இல் ரூ.160 உயா்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகி புதிய உச்சங்களைத் தொட்டது.

புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.9,805-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.78,440-க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.137-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயா்ந்துள்ளது.

கடந்த 8 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:

ஆகஸ்ட் 26 ரூ.74,840 (+ரூ.400)

ஆகஸ்ட் 27 ரூ.75,120 (+ரூ.280)

ஆகஸ்ட் 28 ரூ.75,240 (+ரூ.120)

ஆகஸ்ட் 29 ரூ.76,280 (+ரூ.1,040)

ஆகஸ்ட் 30 ரூ.76,960 (+ரூ.680)

செப்டம்பர் 1 ரூ.77,640 (+ரூ.680)

செப்டம்பர் 2 ரூ.77,800 (+ரூ.160).

செப்டம்பர் 3 ரூ.78,440 (+ரூ.640).

வெள்ளி முதலீடு மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் வெள்ளி தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தாமிரத்தைவிட வேகமாக கடத்தக்கூடிய தன்மை வெள்ளிக்கு உண்டு. ஆகையால், மின்சார வாகனங்கள், லித்தியம் மின்கலன்கள், சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட மின்சார சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளியின் தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை உயா்ந்து வருதாக கூறப்படடுகிறது.

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

As the price of gold jewelry continues to rise in Chennai, it hit a new high on Wednesday, selling for Rs. 78,4400 8 gram.

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்த... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை ... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழக வருவா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே தவிர, புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளது சுகாதாரத் துறை, மக்கள் அதிகம் கூடும்... மேலும் பார்க்க

இரு காசுகளை விழுங்கிய 2 ஆம் வகுப்பு மாணவி! விரைந்து செயல்பட்டுக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, இரண்டு காசுகளை விழுங்கிய நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் க... மேலும் பார்க்க

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த... மேலும் பார்க்க