செய்திகள் :

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

post image

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழையால் அமிர்தசரஸ், பட்டியாலா, குர்தாஸ்பூர், லூதியானா, பதான்கோட் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 1,655 கிராமங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அதிகபட்சமாக அமிர்தசரஸ் மாவட்டத்தில் 190 கிராமங்களும், குர்தாஸ்பூரில் 324 கிராமங்களும், கபுர்தாலாவில் 123 கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 3.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஹோஷியார்பூரில் 7 பேரும், பதான்கோட்டில் 6 பேரும், பர்னாலாவில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இந்த பாதிப்பு பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

A total of 37 people have lost their lives in Punjab due to severe rains

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். வட மாநிலங்களான ஜம்மு... மேலும் பார்க்க