செய்திகள் :

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

post image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

வட மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள அவர்,

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவர விரும்புகிறேன். பஞ்சாபில் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.

இத்தகைய கடினமான நேரத்தில், உங்கள் கவனமும் மத்திய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியமாக உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற போராடி வருகின்றன.

இந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு - உடனடியாக ஒரு சிறப்பு நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பஞ்சாப் வெள்ளம்: 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

Rahul Gandhi urges PM Modi to announce special relief package for flood-affected States

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர... மேலும் பார்க்க

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டிய... மேலும் பார்க்க

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத... மேலும் பார்க்க

ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் த... மேலும் பார்க்க