செய்திகள் :

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

post image

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் போன்ற அணை கட்டுமானங்களுக்காக தங்களின்  இருப்பிடங்களை இழந்தவர்கள்.

ஆனைமலை பழங்குடி கிராமம்

அதேநேரத்தில் அவர்கள் கிராமங்களின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள்,  விருந்தினர் இல்லம், சுற்றுலா பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இது அந்த மக்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது.

இதுகுறித்து பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் தனராஜிடம் பேசியபோது, “கோழிக்கமுத்தி என்கிற கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்த வழியில் உள்ள விருந்தினர் இல்லங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டும், கோழிக்கமுத்தி கிராமத்தில் மின்சார வசதி தரப்படவில்லை.

தனராஜ்

கீழ்பூனாட்சி கிராமத்தில் உள்ள ஒரு பகுதி மக்கள் மின்சார வசதிக்காக கோரிக்கை வைக்கிறபோது, அங்குள்ள அதிகாரிகள் இது புலிகள் சரணாலயம் என்பதால் மின்சாரம் கொடுக்க முடியாது என்று அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்திற்கு சென்று மக்கள் கோரிக்கைகளை விசாரித்து, அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.

எருமைப்பாறை கிராமத்தில் அந்த மக்கள் மின்சாரம் அமைப்பதற்கான கட்டணத்தை (28 குடும்பங்கள் தலா ரூ.3,800) செலுத்தியும், நடைமுறையில் இல்லாத செயல்முறைகளை கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். 2006 வன உரிமைச் சட்டப்படி, பழங்குடி கிராமத்தில் வசிக்கும் இடத்திற்கு பட்டா வாங்கப்பட்ட பிறகு அது வருவாய் கிராமமாக கருதப்பட்டு சாலை, மின்சாரம், குடிநீர், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய இடமுள்ளது.

ஆனைமலை பழங்குடி கிராமம்
ஆனைமலை பழங்குடி கிராமம்

 ஆனால் சட்டத்தை சரியாக பின்பற்றாமல் பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளை மறுத்து வருகிறார்கள். அரசு உடனடியாக ஆனைமலை பழங்குடி கிராமங்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றார்.

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க

India - USA: `இந்தியா - அமெரிக்கா உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது’ - என்ன சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவில் நெருக்கமான சூழலே நிலவியது. உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை தொடர்புபடுத்தத் தொடங்கிய... மேலும் பார்க்க

BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய KCR மகள் கவிதா

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந... மேலும் பார்க்க