செய்திகள் :

BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய KCR மகள் கவிதா

post image

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி தீர்மானித்திருக்கிறார்.

இவ்வாறிருக்க, கடந்த திங்களன்று ஊடகங்கள் முன்னிலையில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் (KCR) மகளும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா, "காலேஷ்வரம் அணை கட்டும்போது, கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் மாநில நீர்வளத் துறை அமைச்சராக இருந்தார்.

தற்போதைய விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சந்தோஷும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

கவிதா
கவிதா

இவர்களால்தான் என்னுடைய தந்தைக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.

இப்போதெல்லாம் என் தந்தையைச் சுற்றிலும் என்னைக் குறை கூறும் கும்பல் மட்டுமே உள்ளது" என்று வெளிப்படையாகப் பேசினார்.

இதன் காரணமாக, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கட்சியிலிருந்து கவிதா நேற்று (செப்டம்பர் 2) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் சமூக மற்றும் கலாசாரக் குழுவான தெலுங்கானா ஜக்ருதி அமைப்பின் (கவிதாவால் தொடங்கப்பட்டது) அலுவலகத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, "கட்சியிலிருந்து திடீரென நான் இடைநீக்கம் செய்யப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது.

சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன்.

எனது இந்த ராஜினாமாவை சபாநாயகர் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு அனுப்புகிறேன்.

கவிதா
கவிதா

அதேசமயம், எந்தக் கட்சியுடனும் நான் செல்லவில்லை. தெலுங்கானா ஜக்ருதி உறுப்பினர்களுடன் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்.

எனது தந்தையும், எனது சகோதரரும்தான் (கே.டி. ராமாராவ்) என் குடும்பம். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.

கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ அல்லது பதவிகளை இழந்தாலோ இந்தப் பிணைப்பு முறிந்துவிடக்கூடாது.

சிலர் தங்கள் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். என் தந்தையைச் சுற்றியிருப்பவர்களை ஆராயுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஹரீஷ் ராவும், ரேவந்த் ரெட்டியும் விமானத்தில் ஒன்றாகப் பயணம் செய்யும் போது எங்கள் குடும்பத்தை அழிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ரேவந்த் ரெட்டி இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

அவர் எனது குடும்ப உறுப்பினர்கள் கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்தார். ஹரிஷ் ராவ் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

தந்தை சந்திரசேகர ராவுடன் மகள் கவிதா
தந்தை சந்திரசேகர ராவுடன் மகள் கவிதா

ஆனால், காலேஸ்வரம் திட்டம் தொடங்கியபோது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ​​ஹரிஷ் ராவ்.

ஹரிஷ் ராவ் மற்றும் அவரது உறவினர் சந்தோஷ் ராவ் எங்கள் குடும்பத்தையும் கட்சியையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்" என்று கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய கவிதா, "நீண்ட நாள்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்துக்குச் சென்று, இந்தச் சதித்திட்டங்கள் குறித்தும் எனக்கெதிரான எதிரான பொய் பிரசாரம் பற்றியும் கே.டி.ஆரிடம் புகார் அளித்தேன்.

இது குறித்து நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அண்ணா? இது தொடர்பாக ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?" என்று கேள்வியும் எழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் ... மேலும் பார்க்க

India - USA: `இந்தியா - அமெரிக்கா உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது’ - என்ன சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவில் நெருக்கமான சூழலே நிலவியது. உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை தொடர்புபடுத்தத் தொடங்கிய... மேலும் பார்க்க