செய்திகள் :

India - USA: `இந்தியா - அமெரிக்கா உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது’ - என்ன சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்

post image

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவில் நெருக்கமான சூழலே நிலவியது.

உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை தொடர்புபடுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த உறவில் விரிசல் ஆரம்பமானது.

தொடர்ந்து இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அதிபர் ட்ரம்ப் ``அமெரிக்காவே முதன்மை" (America First) என்ற கொள்கையை தீவிரமாகப் பின்பற்றினார்.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்குப் பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக தெரிவித்தார்.

பீட்டர் நவேரா
பீட்டர் நவேரா

இதனால் அமெரிக்க வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது ஒரு "ஒருதலைப்பட்சமான" உறவு என்றும் விமர்சித்தார்.

அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளிப்படையாகப் பேசினார்.

குறிப்பாக, ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) போன்ற அமெரிக்க பைக்களுக்கு இந்தியா விதித்த அதிக வரிகளை ட்ரம்ப் பல கூட்டங்களில் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த நிலையில்தான், இந்த வர்த்தகப் பிரச்னைகளைச் சரிசெய்ய அமெரிக்காவின் "பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை அமைப்பு" (Generalized System of Preferences - GSP) திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகச் சலுகைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதனால், அமெரிக்காவிற்குப் பல கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், ``அமெரிக்கா இந்தியாவுடன் மிகவும் நன்றாகப் பழகுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால் இந்தியாதான் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து வருவதால் பல ஆண்டுகளாக அந்த உறவு ஒருதலைப்பட்சமாகவே இருந்தது.

நான் பதவியேற்றபோதுதான் அது மாறியது. இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட சில வரிகளை நீக்குவது குறித்து எந்தப் பரிசீலனையும் இல்லை. அதே நேரம் இந்தியாவுடனான எங்கள் உறவில் எந்த சிக்கலும் இல்லை." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் ... மேலும் பார்க்க

BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய KCR மகள் கவிதா

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந... மேலும் பார்க்க