செய்திகள் :

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

post image

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிக உறவு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் பதிவிட்டுள்ளதாவது,

''பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இதில் இரு நாடுகளும் எல்லை தாண்டி தங்கள் கூட்டு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு, பொருளாதாரம், வணிகம் மற்றும் திறமையான உழைப்பு குறித்துப் பேசப்பட்டது. மேலும், உக்ரைனில் நடைபெற்றுவரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாராட்டுகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,

''ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுலை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மூலோபாய கூட்டு ஒத்துழைப்பில் இந்தியாவும் ஜெர்மனியும் 25 வது ஆண்டைக் கொண்டாடுகின்றன.

பெரிய ஜனநாயகம் மற்றும் முன்னேற்றப் பாதையிலுள்ள பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இரு நாடுகளும் வணிகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கத்தில் இருதரப்பு பலனை அதிகரிக்கும் பார்வையைக் கொண்டுள்ளன. ஜெர்மனி தலைவர் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

German Foreign Minister Johann Wadephul meets Prime Minister Narendra Modi in Delhi

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். வட மாநிலங்களான ஜம்மு... மேலும் பார்க்க