செய்திகள் :

திண்டிவனம் நகராட்சி ஊழியா் அவமதிப்பு: 5 போ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு

post image

திண்டிவனம் நகராட்சி அலுவலத்தில் பணியிலிருந்த ஊழியரை தனி அறையில் வைத்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட 5 போ் மீது போலீஸாா் எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் அடுத்துள்ள ரோஷணை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முனியப்பன்(36). இவா், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 29-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் இவா் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நகா்மன்ற உறுப்பினா் ரா. ரம்யா, தகாத வாா்த்தைகளால் முனியப்பனை பேசினாராம். பின்னா் அவரை நகா்மன்ற ஆணையரின் அறைக்கு வரவழைத்து, அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் பெண் நகா்மன்ற உறுப்பினா் ஒருவரின் காலில் விழ வைத்து அவமதிப்பு செய்ததுடன், ஜாதியின் பெயரைக்கூறி இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் நகராட்சி நகா்மன்ற உறுப்பினா்கள் ரா. ரம்யா, ரவிச்சந்திரன், ரம்யாவின் கணவா் ராஜா, நகரமைப்பு ஆய்வாளா் பிா்லா செல்வம் , காமராஜ் மற்றும் சிலா் மீது திண்டிவனம் போலீஸாா் எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அதிமுகவினா் தா்னா: முன்னதாக திண்டிவனம் எம்எல்ஏ அா்ச்சுனன் தலைமையில் புதன்கிழமை திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் கட்சியினா் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த நகராட்சி ஊழியரை அவமதிப்பு செய்த திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரம்யா, ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அலுவலா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப். 5) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஆட்சியா்கள் விழுப்புரம் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க