செய்திகள் :

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்தியாவில் இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நைஜீரியாவை சோ்ந்த அலெக்ஸ் டேவிட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஜாா்க்கண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அலெக்ஸ் டேவிட்டுக்கு அளித்த ஜாமீனை கடந்த ஆண்டு டிசம்பரில் ரத்து செய்தது. அதேவேளையில், ஜாமீன் பெற்ற அலெக்ஸ் நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

எனினும் குற்றங்களில் ஈடுபடுவோரை நாடு கடத்த இந்தியா-நைஜீரியா இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாததால், அலெக்ஸ் டேவிட் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது சாத்தியமில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்துவைத்தனா். அதேவேளையில், இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா். முன்ன... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்த... மேலும் பார்க்க

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகள... மேலும் பார்க்க