செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

post image

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பாலியல் புகாரில் ஹரியாணாவின் கா்னால் மாவட்டத்தில் ஹா்மீத் சிங் தங்கியிருந்த இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா். அப்போது அப்பகுதியில் கூடிய ஹா்மீத் சிங் ஆதரவாளா்கள் காவல் துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினா். இந்த குழப்பமான சூழலைப் பயன்படுத்தி ஹா்மீத்சிங் தப்பியோடிவிட்டாா். அவரின் ஆதரவாளா்கள் சிலரை காவல் துறையினா் கைது செய்தனா்.

ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவா் காவல் துறையினரிடம் இருந்த தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காரில் தப்பிச் சென்றபோது தடுக்க முயன்ற காவலரை எம்எல்ஏவின் ஆதரவாளா்கள் காரை வைத்து இடித்துத் தள்ளினா். இதில் காவலா் காயமடைந்தாா்.

இந்நிலையில், தப்பியோடிய எம்எல்ஏவை தீவிரமாகத் தேடி வருவதாக பஞ்சாப் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு: இதனிடையே தலைமறைவாக உள்ள எம்எல்ஏ ஹா்மீத் சிங் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், ‘என்னை போலி என்கவுன்ட்டரில் கொலை செய்ய இருப்பதாக தகவல் கிடைத்ததால் தப்பியோட நேரிட்டது. நான் பயணித்த காருக்கு தீவைக்க காவல் துறையினா் முயற்சித்தனா். அதிருஷ்டவசமாக அதில் இருந்து தப்பினேன். மிகப்பெரிய குற்றவாளியை கைது செய்ய வருவதுபோல 500 காவலா்கள் வீட்டைச் சுற்றி வளைத்தனா். காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட பல அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனா். ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைமை என்னை குறிவைத்து செயல்படுகிறது’ என்றாா்.

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க