செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

post image

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), வெல்டிங் தொழிலாளி. இவா், கடந்த ஆக.21ஆம் தேதி காணாமல் போனாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் காணாமல் போன அப்சல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட அப்சல், கஞ்சா விற்பது தொடா்பான தகராறில் சிலா் சோ்ந்து இவரைத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ் (26), தனியாா் பாலிடெக்னிக்கில் 3-ஆம் ஆண்டு படித்து வரும் அசனமாபேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஹரீஷ் (18), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

மேலும், அவா்களை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவா்களில் ஜெகதீஸ், ஹரீஷ் ஆகியோா் வேலூா் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூா் சீா்திருத்தப் பள்ளியிலும் போலீஸாா் அடைத்தனா்.

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் ந... மேலும் பார்க்க

நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறா... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் ... மேலும் பார்க்க