செய்திகள் :

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

post image

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்பி வைக்கப்படுவது சுகாதாரத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செம்பாங்குறிச்சி பகுதியில் கர்ப்பிணிகளிடம் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும் கும்பல் உள்ளதாக சேலம் மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை

தகவலின் பெயரில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகனாந்த் மற்றும் சுகாதார மருத்துவர்கள் குழுவினர் நேற்று சின்னசேலம் செம்பாங்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தைத் தெரிவித்தது கண்டறியப்பட்டது.

இங்கு சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து வந்த 8 கர்ப்பிணிகளுக்குக் கருவின் பாலினத்தைக் கண்டறிய தலா ரூ.25,000 வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்த ஸ்கேன் மிஷன், பணத்தைப் பறிமுதல் செய்த சுகாதாரத்துறையினர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்த கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (36) மற்றும் புரோக்கர் ஆகியோரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

இதுபற்றி தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் 2 பேரையும் சுகாதாரத்துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணிகளை இங்கு அனுப்பிய புரோக்கர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Baby
Baby

மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த புரோக்கர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களின் விவரங்களையும் சுகாதாரத் துறையினர் சேகரித்து விசாரித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.‌

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க