செய்திகள் :

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

post image

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.

அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனால், ரன்யா ராவும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது; அவர்கள் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரன்யா ராவ்

பல முறை ரன்யா ராவ் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத்துறை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதுதவிர, அவருடன் கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் தருண் கொண்டராஜுவுக்கு ரூ.63 கோடியும், நகைக்கடை அதிபர் சாஹில் ஜெயின் மற்றும் பரத்குமார் ஜெயின் ஆகியோருக்கு தலா ரூ.56 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பெங்களூரு மத்திய சிறைக்கு சென்ற வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் தலா 250 பக்க நோட்டீஸும் 2,500 பக்க ஆவணங்களும் வழங்கினர்.

நேற்று மட்டும் 11,000 பக்க ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று நால்வரிடமும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ரன்யா ராவ் வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் துபாய்க்கு 52 முறை சென்று தங்கம் கடத்தியது தெரியவந்துள்ளது.

ரன்யா ராவ்

நடிகை ரன்யா ராவ், போலீஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். ராமச்சந்திர ராவின் நண்பர் ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.

அவரை பயன்படுத்தித்தான் ரன்யா ராவ் நீண்ட நாள்களாக தங்கம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ராமச்சந்திர ராவுக்கு பணி வழங்கப்படாமல், கர்நாடக அரசு அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தது. சமீபத்தில்தான் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க

ஈரோடு: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நீ... மேலும் பார்க்க

பீகார் டு கோவை... வழிப்பறி கும்பலிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!

கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜூலியானா (47). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு 2 பேர் இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல சென்ற... மேலும் பார்க்க

ஊட்டி: வீட்டு வாசலில் கஞ்சா சாகுபடி; மான் கறியில் உப்புக் கண்டம்; வனத்துறை சோதனையில் அதிர்ச்சி தகவல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்... மேலும் பார்க்க

Ramya: `ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்' - நடிகை ரம்யா புகாரில் 12 பேர் கைது!

கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர... மேலும் பார்க்க